வீரவநல்லூர், ஏப்.18: சேரன்மகாதேவியில் ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்களின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேரன்மகாதேவியில் வருவாய்த்துறை மற்றும் ஸ்காட் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை தாசில்தார் வின்சென்ட் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியானது சேரன்மகாதேவி ரவுண்டானாவில் துவங்கி பஸ் ஸ்டான்ட் வரை சென்றது. பேரணியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த வாசங்கள் அடங்கிய பலகைகளை மாணவர்கள் கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். முன்னதாக 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் மாணவர்கள் தேர்தல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் கல்லூரி முதல்வர் ஜஸ்டின் திரவியம், நிர்வாக அதிகாரி ஜெயபாண்டி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சேகர், துறைத்தலைவர் ஜான்சன் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
previous post