பூதப்பாண்டி, ஏப்.13: கீரிப்பாறையை அடுத்த வெள்ளாம்பி பகுதியை சேர்ந்தவர்கள் அனிஷ் (20), விபின் (20). சம்பவத்தன்று இரவு இரண்டுபேரும் பைக்கில் தடிக்காரன்கோணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். வழியில் பைக் பஞ்சர் ஆனது. இதையடுத்து பஞ்சர் ஓட்டுவதற்காக தடிக்காரன்கோணம் சென்று ஒர்க் ஷாப்பில் பைக்கை விட்டு விட்டு, இருவரும் வெள்ளாம்பிக்கு பஸ்சில் வந்தனர். அப்போது அந்த பஸ்சில் இருந்த அதேபகுதியை சேர்ந்த ஊராட்சி உறுப்பினர் மாரிமுத்துவுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனிஷ், விபின் ஆகிய இரண்டு பேரும் வெள்ளாம்பி வந்து இறங்கும் போது அங்கு வந்த ரங்கன் என்பவர் மாரிமுத்துவிடம் அரிவாளை கொடுத்து உள்ளார். அவர் அந்த அரிவாளை வாங்கி, அனிஷ், விபின் ஆகிய 2 பேரையும் வெட்டி உள்ளார். இதில், காயமடைந்த இரண்டு பேரும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் மாரிமுத்து மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு துணையாக இருந்த ரங்கன் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.
கீரிப்பாறை அருகே அரசு பஸ்சில் தகராறு 2 வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு ஊராட்சி உறுப்பினர் கைது
previous post