ஜெயங்கொண்டம், ஏப்.6: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் கிராமம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகன் பாலமுருகன் (28) கூலி தொழிலாளி. இவர் அருகே உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமியை இரண்டு வருடங்களுக்கு முன்பு பெண்ணின் தாயார் உதவியுடன் காதலித்து திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும். இது குறித்து புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக பாலமுருகன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் இருவர் மீதும் வழக்கு பதிந்து பாலமுருகனை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.