திருவண்ணாமலை: திருவண்ணாமலை பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமன் முன்னிலையில் பாஜகவினர் ஒருவருக்கொருவர் கற்களால் தாக்கி கொள்ள முயன்றதால் பரபரப்பு நிலவியது. ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணை தலைவர் கல்லை எடுத்து பாஜக பிரமுகரை தாக்க முயற்சித்ததுடன், தகாத வார்த்தைகளால் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஈரோட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழ்மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமாரை ஆதரித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார். பிரச்சாரம் முடிந்தவுடன் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையை கேலி கூட்டாக உள்ளது.