புதுச்சேரி: ரங்கசாமி, நமச்சிவாயம் தேர்தல் பரப்புரையில் அனுமதியை மீறி கூட்டம் கூடியதால் பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் 100 பேர் பங்கேற்க பாஜகவினர் அனுமதி பெற்ற நிலையில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் வழக்கு தொடரப்பட்டது.