மும்பை: தொடர்ந்து உயர்ந்துவரும் இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 603 புள்ளிகள் உயர்ந்து 74,254 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 203 புள்ளிகள் அதிகரித்து 22,526 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது.