கொல்கத்தா: மேற்குவங்க மேதினிபூர் மக்களவை தொகுதி உறுப்பினரான திலிப் கோஷ், “மேற்குவங்க முதல்வர் மம்தா கோவா செல்லும்போது கோவாவின் மகள் என்கிறார். திரிபுரா போகும்போது திரிபுரா மகள் என்கிறார். மேற்குவங்கம் மேற்குவங்க மகளுக்கே என்று முழங்கும் மம்தா தான் யாருடைய மகள் என்பதை முதலில் தௌிவுப்படுத்தட்டும்” என்று பேசியுள்ளார்.
இந்த காணொலி தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் திலிப் கோஷ் மீது வழக்கறிஞர் உள்ளிட் 2 பேர் துர்காபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் 2 பிரிவுகளின்கீழ் திலிப் கோஷ் மீது துர்காபூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.