அரூர், மார்ச் 27: அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ் செயல்படும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 40 விவசாயிகள், 225 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால் ₹7,389 முதல் ₹8,366 வரை ஏலம் போனது. இதில் மொத்தம் 225 மூட்டை பருத்தி ₹6.5லட்சத்திற்கு ஏலம் போனது.