தர்மபுரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் முரளி மகன் சஞ்சீவ் (32). இவர் சொந்தமாக மொபைல்ஸ் ஷாப், மெடிக்கல் ஷாப் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை, சொந்த வேலை விஷயமாக ராயக்கோட்டையில் இருந்து, தர்மபுரிக்கு காரில் வந்துள்ளார். ஓசூர்- தர்மபுரி புதிய நெடுஞ்சாலையில் வந்த போது, பாலக்கோடு அருகே சோமனஅள்ளி கசியம்பட்டி பகுதியில், காரின் முன்பகுதியில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எரிந்தது.
இதில் காரை விட்டு வெளியேற முடியாமல் சஞ்சீவ் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து உண்மையிலேயே தீ விபத்தில் இறந்தாரா? அவரை கொலை செய்து, காரில் வைத்து தீ வைத்து விட்டுச் சென்றனரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.