சென்னை: அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் அமிர்தகுமார், கோபாலபுரம் செ.பீட்டர் அந்தோணிசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், சுப்பிரமணி, மணிராஜ், நிதிக் காப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், சரவணன், கந்தசாமி ஆகியோர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை மனு வழங்கி பேசினர். அப்போது, நிதி நிலை சரியானதும், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.