கோவை: கோவை விமானநிலையத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பயணியிடம் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷியாம்சிங் என்பவரிடம் இருந்து 2 துப்பாக்கி குண்டுகளை சி.ஐ.எஸ்.எப். போலீசார் பறிமுதல் செய்தனர். சி.ஐ.எஸ்.எப். காவலர் அருண்குமார் அளித்த தகவலின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.