சென்னை: மீஞ்சூர் அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு 600மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள, முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கொதிகலன் நேற்று பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.