திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியில் வாழை தோப்பு நடுவே கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். நாகராஜ் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை தோப்பு நடுவே ராமன் கஞ்சா செடி வளர்த்துள்ளார். நாகராஜனின் வாழை தோப்பில் குரிசிலாப்பட்டு போலீஸ் சோதனை நடத்தியபோது 7 கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.