டெல்லி: வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் இன்று உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடக்கும் ஆலோசனையில் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது.