ஈரோடு,ஜூன்20: ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையத்தில் நாளை(21ம்தேதி) மாலை டாடா நிறுவனத்தின் நகை பிரிவான தனிஷ்க் ஜுவல்லரியின் புதிய ஷோரூம் சிகேஎஸ் பங்களாவில் புதிய ஷோரூம் துவங்கப்பட உள்ளது. ஷோரூமை டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே.வெங்கடராமன் தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். விழாவில் டைட்டன் நிறுவனத்தின் தென்னிந்திய வர்த்தக தலைமை அதிகாரி சரத் மற்றும் தனிஷ்க் நகைபிரிவின் தமிழக தலைமை அதிகாரி நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.