ஈரோடு,ஜூன்20: ஈரோட்டில் திருநங்கைகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஈரோட்டில் டவுன் போலீஸ் சப்.டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக சில திருநங்கைகள் குற்றச்செயல்களிலும், சிலர் சட்ட விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருவதும் தொடர்ந்து அதிகரித்தது.
இதனை தடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட எஸ்பி ஜவகர் உத்தரவிட்டார். இதன் பேரில், ஈரோட்டில் நேற்று போலீசார் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம் தலைமை தாங்கினார். பயிற்சி ஏஎஸ்பி ஷஹ்னாஸ் முன்னிலை வகித்தார்.