சென்னை: அரசுப்பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்காமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எப்படி தரமான கல்வியை வழங்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.