அமிர்தசரஸ்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் வரும் என்பதால் ஒன்றிய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. இதுதொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. ஆனால் முதல்வர் பகவந்த் மான் சிங் அதனை ஏற்க மறுத்துள்ளார். ஒன்றிய அமைச்சகத்தின் சிஆர்பிஎப் படையின் இசட் பிளஸ் பாதுகாப்பு எனக்கு வேண்டாம். பஞ்சாப் போலீசாரின் பாதுகாப்பே போதுமானது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.