கலிபோர்னியா: இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று ராகுல் காந்தி நம்பிக்கை வைத்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர்க்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது; அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி கலிபோர்னியா மாகாணம் சாந்தா கிளாராவில் இந்தியர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் அக்கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்றது.