நிலக்கோட்டை, மே 27: நிலக்கோட்டையை அடுத்த அம்மையநாயக்கனூர் மாவுத்தம்பட்டி காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் முதல் துவங்கியது. இந்நிலையில் நேற்று காலை ஊரின் ஒதுக்குப்புறமுள்ள உள்ள புளியமர தோப்பில் அதே ஊரை சேர்ந்த கவரிங் பொருட்கள் விற்பனை செய்து வரும் சுந்தரேசன் (40) என்பவர் உடலில் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை கண்டு அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.