பெங்களூரு: கர்நாடக மாநிலம், கொப்பள் மாவட்டத்தில் உள்ள குக்கன்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரையா, கடந்த 6 மாதங்களாக தனது வீட்டின் மின்கட்டணத்தை செலுத்தவில்லை. மின்கட்டணம் சுமார் ரூ.9 ஆயிரம் பாக்கி உள்ள நிலையில் மின்கட்டணத்தை வசூல் செய்ய மின்வாரியத்தில் இருந்து அதிகாரிகள் கடந்த வாரம் சென்ற போது நான் கட்டணத்தை செலுத்த மாட்டேன். மின்சாரம் இலவசம் என்று அரசு அறிவித்துவிட்டது என தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் நேற்று மின்வாரிய அதிகாரிகள் இருவர் அவரது வீட்டில் மின்சார இணைப்பை துண்டிக்க சென்ற போது காலில் இருந்த செருப்பை எடுத்து அதிகாரிகளை தாக்கியுள்ளார். இதை வீடியோ எடுத்த நிலையில் அவரையும் தாக்க சந்திரசேகரையா முயற்சித்தார். இதையடுத்து போலீசார் சந்திரசேகரய்யாவை கைது செய்தனர்.