சென்னை: சூலூர் அருகே பெட்டிக்கடையில் இந்தி பேசுபவர்களை குறிவைத்து கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசார் அங்குள்ள பெட்டிக்கடையில் வடமாநில தொழிலாளர்களிடம் பேசிய நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் புகையிலை வடிவில் கஞ்சா இருப்பது தெரியவந்ததால் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர் தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ராஜ் என்பதும், தேனி தூத்துக்குடியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து இந்தி பேசுபவர்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை சூளைமேடு மற்றும் எம் ஜி ஆர் பகுதியில் கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரணம் மாத்திரைகள் வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சூளைமேடு நெடுஞ்சாலை மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் போலீசார் கண்ணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு கிடமாக நின்று கொண்டிருந்த ஆனந் என்பவரை சோதனை செய்த போது 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்ததால் அவரை கைது செய்தனர்.
இதே போன்று எம் ஜி ஆர் நகர் பகுதியில் பச்சையப்பன் தெரு அருகே உடல் வலி நிவாரணம் மாத்திரைகளை விற்பனை செய்த திவாகர், பிரவீன் குமார், சுந்தர் ராஜன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 330 உடல் நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.