சென்னை: தமிழ்நாட்டில் 9 ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் தகித்ததால் மக்கள் தவித்துப்போயினர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக திருச்சி, மதுரை நகரத்தில் தலா 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை விமான நிலையம் 103, கரூர் பரமத்தி, நாமக்கல்லில் தலா 102, ஈரோட்டில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.