புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரத்துக்கு 2 கார்களில் கடத்தி வரப்பட்ட 936 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே நாவற்குளத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள் சிக்கின. மதுபாட்டில் கடத்தி வந்த பாலமுருகன் (26) என்பவரை கைதுசெய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபாட்டில்கள் கடத்தி வந்த மற்றொரு கார் ஓட்டுநருக்கு மதுவிலக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கார்களில் கடத்தி வந்த 936 மதுபாட்டில்கள் பறிமுதல்
previous post