ஈரோடு, மே 18: மொடக்குறிச்சியை சேர்ந்தவர் மாயன் (70). மாட்டு வியாபாரியான இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் உள்ள 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மாட்டு வியாபாரி மாயனை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.