சென்னை: குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2024-25ல் ஒரு லட்சம் வீடுகள். ஒரு வீட்டின் மதிப்பீடு ரூ.3.5 லட்சம். ஊரகப் பகுதிகளில் ஊராட்சி ஒன்றிய சிறு பாசன ஏரிகள், ரூ. 500 கோடி செலவில் 5000 நீர்நிலைகள் புனரமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.