Saturday, May 18, 2024
Home » உ.பியில் டிரக் மீது கார் மோதி தீ விபத்து: 8 பேர் கருகி பலி

உ.பியில் டிரக் மீது கார் மோதி தீ விபத்து: 8 பேர் கருகி பலி

by Dhanush Kumar

பரேலி: உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் டிரக் மீது மோதிய கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒரு குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். உத்தரபிரதேசத்தின் பஹேரி பகுதியில் வசிக்கும் ஃபுர்கான் என்பவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் பரேலியில் நடக்கும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள காரில் சென்றார். பரேலி – நைனிடால் நெடுஞ்சாலையில் போஜிபுரா பகுதியில் துபவுரா கிராமத்துக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது டயர் பஞ்சர் ஆனதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையின் நடுவே இருந்த தடுப்பை தாண்டி ஓடிய கார் நைனிடால் சாலையில் எதிர்புறத்தில் வந்து கொண்டிருந்த டிரக் மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் கதவை உடைத்து கொண்டு வௌியேற முயற்சித்தனர். ஆனால் காரின் சென்டர் லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறால் கதவை திறக்க முடியாமல் உள்ளே சிக்கி கொண்டனர். இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேய உடல் கருகி பலியாகினர்.

You may also like

Leave a Comment

seven + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi