காரைக்கால், டிச.31: மத்திய அரசு மூலமாக கிராமப்புற மக்களுக்கு வங்கி கணக்கில் இருந்து எளிதில் பணத்தை எடுத்து கொள்வதற்காக ஆதார் எண்கள் மூலம் கைரேகை பயன்படுத்தி பணம் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தப்பட்டு. தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் வங்கி பயனாளிகளுக்கு தெரியாமல் அவர்களது ஆதார் கைரேகைகளை பயன்படுத்தி ஆறு நபர்களிடமிருந்து தலா ரூ.10 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் முதற்கட்ட விசாரணையில் காரைக்காலில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட 6 பேர்களும் தங்களது கைரேகை பயன்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இதனால் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்