சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 6 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இரட்டை ஆயுள் மற்றும் 47 ஆண்டு கடுங்காவல் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க பெரிய நரிகோட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு உத்தரவு அளித்துள்ளனர்.