சண்டிகர்: பஞ்சாப்பில் 5 மாநிலங்களவை எம்பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 9ம் தேதி முடிகிறது. சுக்தேவ் சிங் தின்ஷா, நரேஷ் குஜ்ரால் (சிரோமணி அகாலிதளம்), பிரதாப் சிங் பஜ்வா, சம்ஷெர் சிங் துல்லோ (காங்கிரஸ்), ஸ்வெத் மாலிக் (பாஜ) ஆகியோரின் பதவிக் காலம் முடிகிறது. இதைத் தொடர்ந்து, இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்றிரவு வெளியிட்டது. மனுத் தாக்கலுக்கான கடைசி தேதி மார்ச் 21. மனு பரிசீலனை நாள் மார்ச் 22. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 24. மார்ச் 31ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது….