திருப்பூர்: பல்லடம் அருகே லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதால் பரபரப்பு நிலவி வருகிறது. பல்லடம் அரசு மருத்துவமனையில் கணேஷ், மகேஸ், மாரீஸ்வரி, புஷ்பராஜ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாட்டையே உலுக்கிய கள்ளக் கிணறு விவகாரம் சர்ச்சையில் இருக்கும் நிலையில் தற்போது பல்லடம் அருகே இதுபோன்று மற்றொரு சம்பவம் நடைபெற்றது தற்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.