Tuesday, June 11, 2024
Home » தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி இறந்த 4 பேரின் உடல்கள் மீட்பு

தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கி இறந்த 4 பேரின் உடல்கள் மீட்பு

by Neethimaan


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்த அண்ணன், தம்பி உட்பட 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18ம்தேதி பெய்த அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில், மேலஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன்கள் சேகர் (45), அருள்ராஜ் (37) ஆகிய 2பேரும் கடந்த 18ம்தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். இதுதொடர்பாக அவர்களது தம்பி கனகராஜ் என்பவர் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் ஆத்தூர் பாலத்தின் கீழ்பகுதியில் கரை ஒதுங்கியது. இதேபோல் முக்காணி காமராஜ் நகரைச் சேர்ந்த திருவாண்டி மனைவி அனந்தம்மாள் (70) என்பவரது வீடு கடந்த 18ம்தேதி வெள்ளத்தில் மூழ்கியது. இதில் அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடலும் நேற்று மீட்கப்பட்டது. குலசேகரன்பட்டனம் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த சேர்மபாண்டி மகன் சுரேஷ்குமார் (44) என்பவர் கடந்த 19ம்தேதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரது உடல் நேற்று காரைக்கால் அம்மன் கோவில் அருகே ஒதுங்கியது.

You may also like

Leave a Comment

nineteen − 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi