Wednesday, May 15, 2024
Home » 4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் மலை ஏறிச்செல்ல கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டது மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை

4,560 அடி உயரமுள்ள பர்வத மலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் மலை ஏறிச்செல்ல கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டது மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை

by Karthik Yash

கலசபாக்கம், ஆக. 31: 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் உள்ள மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த ஆவணி மாத பவுர்ணமி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு தைரியமாக மலையேறி செல்ல கைகளில் சக்தி கயிறுகள் கட்டப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆவணி மாத பவுர்ணமியொட்டி நேற்று காலை மல்லிகார்ஜுனேஸ்வர் பிரம்மராம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கடலாடி பட்டியந்தல் வேடப்புலி வெல்லந்தாங்கிஸ்வரர் வடகாளியம்மன் கோயில் வழியாக சுமார் 23 கிலோமீட்டர் தூரம் பர்வத மலையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என பக்தி முழக்கமிட்டு கிரிவலம் சென்றனர். பின்னர் மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். வீரபத்திரன் கோயிலில் பக்தர்களுக்கு மலை ஏறிச் செல்ல தைரியத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கிட கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டது. அந்த கயிறுடன் பக்தர்கள் தைரியமாக 4560 அடி உயரமுள்ள பர்வதமலையை ஏறிச்சென்றனர். அதேபோல் பக்தர்களுக்கு அங்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

மலையடிவாரத்தில் வனத்துறையினர் இந்து அறநிலையத்துறையினர் மற்றும் போலீசார் மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து செல்கிறார்களா என சோதனையிட்டனர். புதன்கிழமை கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தால் இறைவனின் முழு கருணையும், அருட் சுவாசம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

10 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi