விருதுநகர், செப்.1: விருதுநகரில் நேற்று மாலை 6 மணி முதல் 6.45 மணி வரை தொடர் மழையால் பெய்தது. நகரின் தாழ்வான பகுதிகளான பழைய பஸ் நிலையம், புல்லாலக்கோட்டை ரோடு, சாத்தூர் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, வீரபுத்திரன் தெரு, காந்திபுரம் தெரு, அக்ரஹாரம் தெரு, தர்காஸ் தெரு, மொன்னி தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி தேங்கியது. வெயிலின் தாக்கத்தில் இருந்து வந்த மக்கள் மழையின் குளிர்ச்சியால் மகிழ்ச்சியடைந்தனர்.