ஆவடி: ஆவடியை அடுத்து புதிய கண்ணி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த கோவிந்தன்(49). லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்திக்கொண்டு இருந்தார். அப்போது, கோவிந்தனுக்கும், அதேபகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவருக்கும், தகராறு ஏற்பட்டது. நேற்று காலை கோவிந்தன் மகன் மகேஷ் (19) மற்றும் அவரது நண்பர் அரவிந்தன்(21) ஆகியோர் சென்று பிரகாஷை தட்டி கேட்டனர்.
இதையடுத்து, பிரகாஷின் நண்பர்கள் அருண்(21) சாரதி ஆகிய மூன்று பேரிடம் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாஷ், அருண், கோவிந்தன் மற்றும் மகேஷை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.