சென்னை: கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் 12 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தொண்டாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் மாணவர் விடுதிகள், சமுதாய நலக் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளில் 25631 அடிப்படை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் 12 ஆதி திராவிடர் மாணவர் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
previous post