திருவண்ணாமலை, ஆக. 22: விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த வட்ட அளவிலான தடகள போட்டியில் 3000மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். திருவண்ணாமலை வட்ட அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதனை மாவட்ட பேட் மிட்டன் சங்க தலைவர் பிரவீன்தரன் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகளுக்கு நீளம் தாண்டுதல், உயரம் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடந்தது. மேலும் அப்போது, 3000 மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கள் திறமையை மாணவர்கள் வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் இந்த மாதம் நடைபெறும் மாவட்ட அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.