கோவை: ராமநாதபுரத்தில் ராஜேஸ்வரி என்பவற்றின் வீட்டில் 100 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 21ம் தேதி ராஜேஸ்வரி வீட்டில் ரூ. 2.50 கோடி ரொக்கம் 100 சவரன் நகை கொள்ளைபோனது. கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 31 சவரன் நகைகள், ரூ. 35 லட்சம் மீட்கப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட அருண்குமார், சுரேந்திரன், பிரவீன் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.