கடத்தூர், டிச.19: கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலங்கூர் அடுத்த திருவனப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா(32). இவர் கடத்தூர் அடுத்த மணியம்பாடி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு, தனது மகன்கள் மாவீரன்(12), தினேஷ்(10), செகுவரன்(6) ஆகியோருடன் டூவீலரில் வந்தார். கடத்தூர் ஒடசல்பட்டி சாலையில் வந்த போது அவ்வழியாக வந்த வாகனம் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்தியா, மாவீரன், தினேஷ், செகுவரன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சந்தியாவின் உறவினர் மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில், எஸ்ஐ சின்னசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
3 மகன்களுடன் தாய் படுகாயம்
previous post