Thursday, May 16, 2024
Home » மதுராந்தகத்தில் இருந்து சுற்றுலா சென்றபோது சோகம்: குன்னூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி

மதுராந்தகத்தில் இருந்து சுற்றுலா சென்றபோது சோகம்: குன்னூர் மலைப்பாதையில் 100 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பேர் பலி

by Neethimaan

மதுராந்தகம்: குன்னூர் மலைப்பாதையில் மதுராந்தகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்த கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலியாகினர். நீலகிரி மாவட்டத்திற்கு செங்கல்பட்டு மாவடடம் மதுராந்தகத்தை சேர்ந்த செந்தில் (48), பூவானம் (35), சம்பத் (40), இவரது மனைவி சத்யா (35), அருணகிரி (55) (திருமண தரகர்) ஆகியோர் 2 நாள் முன்பு காரில் சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து ஊட்டியில் இருந்து மதுராந்தகம் நோக்கி கார் புறப்பட்டது. காரை செந்தில் ஓட்டினார். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் குன்னூர்‌-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் பகுதியை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

தகவலறிந்து குன்னூர் தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் உதவியுடன் காரில் இருந்த 5 பேரையும் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா மற்றும் அருணகிரி ஆகியோர் உயிரிழந்தனர்.

You may also like

Leave a Comment

13 − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi