Saturday, May 11, 2024
Home » ‘மருதமலை’ படத்தில் வரும் வடிவேல் காமெடி போன்று ஒரு மனைவிக்கு உரிமை கோரிய 2 கணவர்கள்: பஞ்சாயத்தை தீர்த்து வைக்க முடியாமல் தவித்த போலீஸ்

‘மருதமலை’ படத்தில் வரும் வடிவேல் காமெடி போன்று ஒரு மனைவிக்கு உரிமை கோரிய 2 கணவர்கள்: பஞ்சாயத்தை தீர்த்து வைக்க முடியாமல் தவித்த போலீஸ்

by Neethimaan

ஜான்சி: மருதமலை’ படத்தில் வரும் வடிவேல் காமெடியை போன்று ஒரு மனைவிக்கு 2 கணவர்கள் உரிமை கோரியதால், அவர்களின் பஞ்சாயத்தை தீர்த்து வைக்க முடியாமல் போலீசார் தவித்தனர். உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ராணிப்பூர் பகுதியில் வசித்து வந்த பிங்கி என்ற பெண்ணுக்கும், ஜலானில் வசிக்கும் ஒருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அரசின் இலவச திருமண திட்டத்தின் கீழ் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிக்கு நகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இருவரும் ஓராண்டு காலம் சேர்ந்து வாழ்ந்தனர். குடிப்பழக்கம் கொண்ட பிங்கியின் கணவர், வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அடமானம் வைத்து கடனாளி ஆனார். இதனால் மனமுடைந்த பிங்கி, தனது கணவருடன் இருந்து பிரிந்து அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். சில மாதங்கள் அங்கிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த ரோஹித் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இருவரும் ஜாலியாக பல இடங்களுக்கு சுற்றிவந்தனர். தொடர்ந்து பிங்கியை திருமணம் செய்து கொள்ள ரோஹித் முடிவு செய்தார். இந்நிலையில் இருவரும் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொணடனர். இதையறிந்த முதல் கணவர், தனது மனைவி பிங்கியை ரோஹித் என்பவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறி போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து முதல் கணவர், இரண்டாவது கணவர், பிங்கி ஆகியோரை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஒரு பெண்ணுக்கு, இரு ஆண்கள் கணவர் உரிமை கோரியதால் போலீசாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தொடர்ந்து பிங்கியிடம் விசாரித்த போது, தனது முதல் கணவன் குடித்து விட்டு அடித்து உதைத்து தகராறு செய்வதாகவும், தனது நகை போன்ற பொருட்களை எடுத்து கொண்டு சென்றுவிட்டதால், இரண்டாவது கணவர் ரோஹித்துடன் வாழ விரும்புவதாக கூறினார்.

இருந்தாலும் சட்டப்படி முதல் கணவருடன் இருந்து விவாகரத்து பெறாத நிலையில், இரண்டாவது கணவருடன் வாழ அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறினர். இருந்தும் தான் இரண்டாவது கணவருடன் தான் செல்வேன் என்று பிங்கி அடம் பிடித்தார். வேறுவழியின்றி பிங்கியை அவரது இரண்டாவது கணவர் ரோஹித்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தில், முதல் கணவர் தனக்கு நியாயம் வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறார். தமிழ் நடிகர் அர்ஜூன் நடித்த ‘மருதமலை’ படத்தில் வரும் போலீஸ் வடிவேல் காமெடியில், ஒரு பெண்ணுக்கு 5 பேர் உரிமை கோருவர் அதே போல், உத்தரபிரதேசத்தில் ஒரு மனைவிக்கு 2 கணவர்கள் உரிமை கோரிய சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

thirteen + eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi