கோவை, செப்.3: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீசார் சோதனை செய்தபோது மதுரை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (32) என்பவர் கஞ்சாவுடன் இருப்பது தெரியவந்தது. இவர் 8 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்ய முயன்றபோது கைது செய்தனர். இவர் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 9 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 28 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.