ஆவடி : ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட 26 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 26 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குட்கா விற்பனை செய்வோர், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.