பீஜிங்: சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள சாங்ஃபெங் மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 21 பேர் பலியாகினர். 71 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‘மருத்துவமனையில் இருந்து தீப்பிழம்புகள் எழுவதை எனது வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தோம். தீ விபத்து ஏற்பட்டபோது, மருத்துவமனையில் இருந்த மக்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். சிலர் ஜன்னல் வழியாக குதித்தனர்’ என்றனர். அதேபோல் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜின்ஹுவா நகர தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.