சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.
தக்காளியின் விளைச்சல், வரத்து குறையும் போது தக்காளி விலை உச்சத்தை பெறுகிறது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் என்பது தற்போது குறைந்துள்ளது. தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விலையை கட்டுப்படுத்தி சாமானியர்களின் கவலையை போக்கும் வகையில் சென்னையில் நேற்று முதல் 82 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவுக்கு ரூபாய் 20 விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் 140 முதல் 150 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைந்துள்ளதால் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.