Monday, May 20, 2024
Home » 2 ஆண்டு கொரோனா மந்தநிலைக்கு பிறகு நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமானது சென்னை: தேவை அதிகரிப்பால் விரைவில் புதிய விமானங்கள் வருகிறது

2 ஆண்டு கொரோனா மந்தநிலைக்கு பிறகு நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமானது சென்னை: தேவை அதிகரிப்பால் விரைவில் புதிய விமானங்கள் வருகிறது

by kannappan

சென்னை: ஏறக்குறைய இரண்டு ஆண்டு கொரோனா மந்தநிலைக்குப் பிறகு சர்வதேச விமானப்  போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதில் டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும்  பெங்களூரூவுக்கு பிறகு நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமாக சென்னை  விமான நிலையம் மாறியுள்ளது. நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வருவதால் புதிதாக விமான சேவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வர நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஏறக்குறைய இரண்டு ஆண்டு கொரோனா மந்தநிலைக்குப் பிறகு சர்வதேச விமானப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இதில் டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரூவுக்கு பிறகு நாட்டின் ஐந்தாவது பரபரப்பான விமான நிலையமாக சென்னை விமான நிலையம் உள்ளது. கடந்த சில மாதங்களாக சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் சென்னை விமான நிலையத்தில் 3.45 லட்சம் மற்றும் 3.88 லட்சம் சர்வதேச பயணிகள் வரத்து இருந்த நிலையில் ஜூலையில் பயணிகளின் எண்ணிக்கை 4.29 லட்சமாக அதிகரித்துள்ளது. தொற்றுநோய்களின் போது சர்வதேச போக்குவரத்து மந்தமாக இருந்தது. இது விமான நிலையங்களுக்கு பெரும் அடியாக இருந்தது. ஆனால் நிலைமை தற்போது மாறியுள்ளது. ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு பயணித்து வருகிறார்கள். இதனால் பெரும்பாலான விமான நிறுவனங்கள் கூடுதல் சேவையை தொடங்கியுள்ளன. இது விமான நிலையங்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. கடந்த மே மாதத்தில் கொல்கத்தா விமான நிலையம் 15.1 லட்சம் (உள்நாடு மற்றும் வெளிநாடு) பயணிகளை கையாண்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சென்னை விமான நிலையம் 14.07 லட்சம் பயணிகளை கையாண்டுள்ளது. இதேபோல், கொல்கத்தா விமான நிலையத்தில் பயணிகள் ேபாக்குவரத்து கடந்த ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 7% குறைந்து 14.07 லட்சமாக இருந்தது. அப்போது 14.07 லட்சமாக இருந்தது. கடந்த மாதமும் கொல்கத்தாவை விட சென்னை விமான நிலையம் 6 சதவீதம் அதிக பயணிகளை கையாண்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரியில் சென்னை விமான நிலையம் நாட்டிலேயே மூன்றாவது பிசியான விமான நிலையமாக இருந்தது. பிறகு மார்ச் மாதத்தில் பெங்களூரு விமான நிலையம் இந்த இடத்திற்கு வந்தது. மேலும் அதனை தொடர்ந்து தங்கவைத்தது. மற்றொருபுறம் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா விமான நிலையங்கள் தொடர்ந்து பயணிகளை கையாள்வதில் கூடுதல் வளர்ச்சியை கண்டது. இதன் விளைவாக சென்னை விமான நிலையம் 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதில் சுவாரஸ்யமாக ஜூலை மாதத்திற்கான சர்வதேச பயணிகள் போக்குவரத்து தரவுகளைப் பார்த்தால் சென்னை விமான நிலையம் டெல்லி மற்றும் மும்பைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. அதாவது, 4.29 லட்சம் பயணிகளை கையாண்டு பெங்களூரு மற்றும் ஐதராபாத் விமான நிலையங்களை முந்தியுள்ளது. உள்நாட்டுப் பயணிகள் போக்குவரத்தில்  மற்ற மெட்ரோ நகரங்களை விட சென்னை விமான நிலையம் பின்தங்கியுள்ளது. ஜூலை  மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் 10.2 லட்சம் உள்ளநாட்டு பயணிகள்  பயணித்துள்ளனர். டெல்லி – 36.5 லட்சம், மும்பை – 21.5 லட்சம், பெங்களூரு –  19.1 லட்சம், ஐதராபாத் – 13.1 லட்சம் மற்றும் கொல்கத்தா – 11.99 லட்சம்  பேர் பயணித்துள்ளனர். உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஆகாசா ஏர்  நிறுவனமானது சென்னையில் இருந்து பெங்களூரு, மும்பை மற்றும் கொச்சிக்கு  அடுத்த மாதத்தில் இருந்து விமான சேவையை வழங்கவுள்ளது. மேலும் சில நகரங்களுக்கு விமான போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. இங்கு சில நிறுவனங்கள் வழங்கும். மேலும் 305 ஏக்கர் நிலத்தை மாநில அரசிடம் இருந்து பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அது விரைவில் கிடைக்கும் பட்சத்தில், பயணிகளை கையாளும் திறன் மேலும் அதிகரிக்கும். தற்போது இரண்டாம் கட்ட நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக ஆண்டுக்கு 17 மில்லியன் பயணிகளைக் கையாள்வதில் இருந்து 35 மில்லியனாக விரிவுபடுத்த முடியும். மேலும் இத்திறனை ஆண்டுக்கு 55 மில்லியனாகவும் அதிகரிக்க முடியும். நாங்கள் அடையாளம் கண்டுள்ள நிலத்தில் 70% மாநில அரசிடம் உள்ளது. மீதம் உள்ள 30% தனியாரிடம் உள்ளது. இதில் பல்வேறு நவீன வசதிகளை நாங்கள் சேர்க்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.விமான நிலையங்கள் கையாண்ட பயணிகள் எண்ணிக்கை விவரம்: விமான நிலையம்    மே    ஜூன்    ஜூலைடெல்லி        52,38,965    51,26,045    49,08,062              மும்பை        35,47,289    31,76,237    29,87,884     பெங்களூரு    24,73,615    22,72,777    22,34,000  ஐதராபாத்    17,24,808    16,46,056    16,01,281சென்னை        14,61,219    14,53,409    14,50,372கொல்கத்தா    15,17,328    14,07,686    13,60,282…

You may also like

Leave a Comment

2 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi