சென்னை: சென்னையில் 2க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 932 குற்றவாளிகளிடம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 பேர் திருந்தி வாழ்வதாக நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர்.சென்னையில் குற்றங்களை குறைக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் போலீசார் ‘குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கை’ என்ற பெயரில் சிறப்பு தணிக்கை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட 2க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் நேரில் சென்று விசாரணை நடத்தும் சிறப்பு தணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. அதில், சரித்திர பதிவேடு குற்றவாளிகள், செயின் பறிப்பு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட 2க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட 932 குற்றவாளிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.அப்போது, குற்றவாளிகள் இனி திருந்தி வாழ்வதாக 35 பேர் அந்தந்த துணை கமிஷனர்கள் முன்பு நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்தனர். மீதமுள்ள குற்றவாளிகளிடம் இனி எந்த குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என்று போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு கடுமையாக எச்சரித்து சென்றனர். இந்த அதிரடி தணிக்கை தொடரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்….
2க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 932 குற்றவாளிகளிடம் போலீஸ் நேரில் விசாரணை
previous post