கொழும்பு: இலங்கை வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் சென்ற அதிபர் விக்கிரமசிங்கே அங்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடையே பேசிய போது,’’13வது சட்ட திருத்தத்தை ஆராய்ந்தால், அதில் வலுவான உள்ளூர் பொருளாதாரத்தை நிறுவ போதிய அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த விவகாரங்களில் அரசு நிச்சயமாக தலையிடாது. இதற்கான முன்முயற்சிகளை தொடங்க ஊக்குவிக்கிறேன். 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு மாகாணமும் அதற்கேற்ற முன்னேற்றத்துக்கு வழி வகுக்க முடியும். இது இந்த அதிகாரங்களை தற்போது செயல்படுத்த வேண்டிய நேரம்,’’ என்று ஆதரவு தெரிவித்தார்.
13வது சட்ட திருத்தத்துக்கு ரணில் ஆதரவு
previous post