Thursday, May 23, 2024
Home » மாணவ, மாணவிகள் சைக்கிள் இயக்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக அமையும் நுகர்வோர் பாதுகாப்பு தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

மாணவ, மாணவிகள் சைக்கிள் இயக்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக அமையும் நுகர்வோர் பாதுகாப்பு தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

by MuthuKumar
Published: Last Updated on

புதுக்கோட்டை, மார்ச் 8: புதுக்கோட்டை மாவட்டம் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர்மெர்சி ரம்யா, நேற்று) பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு ஃ உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொழிலாளர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் பள்ளிஃகல்லூரிகளில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். அந்தவகையில், நுகர்வோர்களின் உரிமைகள் குறித்து நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். மேலும் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பிற்கு நாம் இழப்பீடு பெற சட்டத்தில் வழிவகை உள்ளதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்.சாந்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (மு.கூ.பொ.).தனலெட்சுமி, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர்.ராஜவேல், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தரக்கட்டுப்பாடு துணை மேலாளர்.பன்னீர்செல்வம், புதுக்கோட்டை தன்னார்வ நுகர்வோர் அமைப்பின் தலைவர் லதா உத்தமன், அறந்தாங்கி, கீரனூர் மற்றும் பொன்னமராவதி தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

twelve − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi