சென்னை: தொழிலாளர்களின் விருப்பமின்றி 12 மணிநேர வேலை வழங்கக்கூடாது என அமைச்சர் கணேசன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் மின்னணுவியல், ஐ.டி நிறுவனங்கள், காலனி ஆலைகள் 12 மணிநேர வேலையை எதிர்பார்க்கின்றன என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். முதலீடு செய்ய வரும் பன்னாட்டு நிறுவனங்கள், வேலைநேரத்தில் நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கின்றன. 4 நாட்கள் தினசரி 12 மணிநேரம் வேலைபார்த்தால் 3 நாட்கள் விடுமுறை வழங்க சட்டமசோதா வழிவகை செய்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் விருப்பமின்றி 12 மணிநேர வேலை வழங்கக்கூடாது: அமைச்சர் கணேசன் விளக்கம்
previous post